Loading...

தினக்ஸ்

Sample Text

அ.தி.மு.க. அரசு தடுமாற்றம் அடைந்து வருகிறது: எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்.//.தொடர் மின்வெட்டு! – அதிகரிக்கும் மக்களின் போராட்டம்.//.பத்திரிகைகள் தனி மனித கண்ணியத்தைக் குலைக்கக் கூடாது : நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு.//.திமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட மின் திட்டங்கள் முடிவடைந்தும் உற்பத்தியை தொடங்காதது ஏன்? கலைஞர்.//.கெஜ்ரிவால் குற்றச்சாட்டுக்கான ஆதாரங்களை காட்டினார் சட்ட அமைச்சர் சல்மான் குர்ஷித் .//.மாறி, மாறி கூட்டணி அமைத்தது தவறு : அன்புமணி ராமதாஸ்.//. .//. .

Sunday, November 29, 2015

ஹிந்துதுவ பரிவார கும்பலுக்கு தமிழில்!?

அமீர்கான் பேட்டி தமிழில் இங்கிலிஸ் தெரியாமல் உளறிக்கொண்டு அலையும் பரிவார காட்டுமிராண்டி கூட்டத்துக்காக தமிழில்.  இதை படித்த பின்பாவது திருந்துஙகள். அமீர்கான் என்ன பேசினார் என முழுவிவரமும் கீழே. 


நாட்டில் பெருகிவரும் சகிப்பின்மை அச்சுறுத்துவதாக இருக்கிறது. அன்றாடம் நடைபெறும் சகிப்பின்மை சார்ந்த சம்பவங்களை செய்தித்தாள்களில் வாசிக்கிறோம். தொலைக்காட்சிகளில் பார்க்கிறோம். இத்தகைய சம்பவங்களால் என் மனைவி கலக்கம் அடைந்துள்ளார். நானும் அச்சமடைந்துள்ளேன் என்பதை மறுப்பதற்கில்லை.

இந்தியாவில் இந்துராஷ்டிரத்தை ஏற்படுத்த போகிரோம் என்ற பெயரில் மத்திய அரசு பார்ப்பணியத்தை புகுத்த பார்க்கிறது!!! எதிராக போராட உரிமை உள்ளது. அது அடுத்தவர்களை பாதிக்காமல், வன்முறை இல்லாமல், சட்டத்தை கையில் எடுக்காமல் இருக்க வேண்டும்.


@ விருதுகளை திருப்பி கொடுப்பவர்கள், இங்கே சகிப்புத்தன்மை குறைந்து வருவதை நினைத்து வருந்தியும், அதனால் மக்களுக்கு ஏற்படும் பாதுக்காப்பின்மையை பார்த்துமே இந்த முடிவை எடுத்துள்ளதாக நினைக்கிறன்.



@ உலகில் எங்கும் வன்முறைகள் நிகழலாம். ஆனால் ஒரு சமூகத்தில் பாதுகாப்புணர்வு அவசியம். அதை உறுதி செய்ய சில விஷயங்கள் வேண்டும் என்று நினைக்கிறேன்,ஒன்று நீதி. ஒரு தவறோ அநியாயமோ நிகழும் போது அதற்கு நீதி வழங்கப்பட வேண்டும். அப்போதுதான் ஒரு சாதாரண மனிதரால் ஒரு சமூகத்தில் பாதுகாப்பாக உணர முடியும்.

@ இரண்டாவதாக, நம்மால் தேர்ந்தெடுக்கப்படும் அரசியல் பிரதிநிதிகள் இந்த நீதியை நிலைநாட்ட முன்வர வேண்டும். அது நடக்காத போது ஒரு மனிதர் பாதுகாப்பற்ற நிலையில் இருப்பதாகவே உணர்வார். எது ஆளும் கட்சி, யார் அதிகாரத்தில் இருக்கிறார்கள் என்பதெல்லாம் முக்கியம் இல்லை.

@ 1984 நடந்ததும் மிகப்பெரிய அநீதி. ஆனால் 1984ல் நடக்கவில்லையா என்ற கேள்வியின் மூலம் இப்போது நிகழும் அநீதிகளை சரி செய்ய முடியாது.

@ இத்தனை ஆண்டுகள் இந்தியாவில் வாழ்ந்திருக்கிறோம் ஆனால் கடந்த சில மாதங்களில் என் மனைவி கிரண் தினசரி நாளிதழ்களை திறக்கவே பயப்பட்டார். வேறு எங்காவது போய்விடலாமா என்று கூட என்னிடம் கேட்டார். கடந்த சில மாதங்களாக நடந்து கொண்டிருப்பவை கடுமையான துயரத்தை ஏற்படுத்தக்கூடியவை. மன அழுத்தம் கூடுகிறது.  

@ எந்த மதமுமே வன்முறையை போதிக்கவில்லை. அப்படி செய்பவர்கள் இந்துவாக இருந்தாலும், முஸ்லீம் ஆக இருந்தாலும் அந்த மதத்தை பின்பற்றவில்லை என்று தான் சொல்ல வேண்டும். நான் அப்படி தான் நினைக்கிறேன்.

@ இந்தியாவில் நிறைய இஸ்லாமியர்களும், இஸ்லாம் அமைப்புகளும் இஸ்ரேல் பினாமி அமைப்பான  ஐ எஸ் ஐ எஸ் மற்றும் அது போன்ற தீவிரவாத இயக்கங்களை எதிர்த்து குரல் கொடுத்துள்ளனர்.

Saturday, August 15, 2015

கொஞ்சம் அவசரப்பட்டு வாங்கிவிட்டோம்!?

🏁 கொஞ்சம் அவசரப்பட்டுதான் சுதந்திரம் வாங்கிவிட்டோம்.

🎏 இன்னுமொரு 50 வருடங்கள் கழித்து வாங்கியிருக்கலாம்.

@ அதற்குள் நாடுமுழுவதும் உள்ள அத்தனை நதிகளையும் இணைத்து விட்டிருப்பான் அந்த வெள்ளைக்காரன், நாம்தான் கூவத்தை கூட தூர்வாறாத கூமுட்டைகளாயிற்றே.

🚅 நாடு முழுவதும் எப்போதோ புல்லட் ரயில் (bullet rail) வந்திருக்கும், நாம் இப்போது தான் மீட்டர் கேஜ்களை  அகல ரயில்பாதை (broad gauge) களாக மாற்ற போராடிக்கொண்டு இருக்கிறோம்.

🚇 ஊட்டி ரயில்பாதையை எப்போதோ இருவழிபாதையாக மாற்றியிருப்பான் அந்த வெள்ளைக்காரன், நாம் இன்னும் தண்டவாளத்தில் சரிந்த மண்ணை வாறுவதற்கு டென்டர் விட்டுக் கொண்டிருக்கிறோம்.

🏤 நாடு முழுவதும் வெள்ளைக்காரனால் கட்டப்பட்ட ஆயிரக்கணக் கட்டிடங்களும் பாலங்களும் அணைகளும் அப்படியே இருக்க முந்தாநாள் கட்டிய சென்னை விமான நிலையம் (Airport) கட்டிடம் பத்துமுறை விழுந்துவிட்டது.

🚢 நாட்டிற்கு வருமானத்தை தரும் சேதுசமுத்திர திட்டத்தை நாற்பது வருடங்களுக்கு முன்னாலேயே பார்ப்பன பயங்கரவாதிகளை ஒழித்துவிட்டு நிறைவேற்றி இருப்பான்  வெள்ளைக்காரன்.

📖 பணம்பிடுங்கும் பச்சோந்தி கல்வி நிறுவனங்களுக்கு பதிலாக நாடு முழுவதும் ஒரே மாதிரியான கல்விமுறை வந்திருக்கும்! நாம் இன்னும் சமச்சீர் கல்விக்கும், இட ஒதுக்கீட்டுக்கும் போராடிக்கொண்டு இருக்கிறோம்.

🍞 வெள்ளைக்காரனால் அடிமைப்பட்ட அத்தனை நாடுகளும் இன்று உச்சத்தில் இருக்க நம் நாடு மட்டும் பாதுகாப்பின்றி வயிற்று பசிக்கும் வாழ்க்கை பசிக்கும் மக்களை பலிகொடுத்துக் கொண்டிருக்கிறது, அடித்து வாங்க சக்தியில்லாமல் அழுதுவாங்கிய சுதந்திரம் என்பதால் ஆளாளுக்கு விளையாடி அக்கறையின்றி தூக்கி எறிந்துகொண்டு இருக்கிறோம்.

🎏 மண்ணுக்கு மட்டுமே சுதந்திரம் வாங்கினோம் மக்களுக்கு வாங்க தவறிவிட்டோம்.

💴 120 கோடி மக்கள் தொகையில் 70 கோடி வறுமைக்கு கீழ்! பெருமையாய் சொல்லிக்கொள்கிறோம் 70 ஆண்டுகளை நெருங்கிவிட்டோம் என்று! இன்றுவரை பிளாட்பாரங்கள் நடக்க பயன்படுவதில்லை நம் நாட்டு ஏழைகள் அங்கு குடியேறி இருப்பதால்.

🇮🇷 எப்படி குத்திக்கொள்ளமுடியும் தேசியக்கொடியை, ஒவ்வொரு முறை குத்தும்போதும் இடறி நெஞ்சுக்குள் குத்துகிறது.

🗿 நம்நாட்டு பெண்களை குஜராத்தில் கூட்டம் கூடி கற்பழிக்கும் வரை, நம்நாட்டு குழந்தைகள் தெருவில் நின்று பிச்சைகேட்கும் வரை, நம்நாட்டு பெண் சிசுக்கள் கள்ளிப்பாலில் சாகும்வரை நமக்கெல்லாம் அருகதையில்லை.

🗽 சுதந்திர நாடென்று சொல்லிக்கொள்ள! ஆண்டுக்கு இரண்டு நாட்களிலும், அண்டை நாட்டு கிரிக்கெட்டிலும் மட்டும் நாட்டுப்பற்று உயிர்வாழும் என்றால் நாமதற்கு அடிமைப்பட்டே இருந்திருக்கலாம் நல்ல காலம் வரும்வரை.

@ நாம் வாங்கி கொடுத்த சுதந்திறத்தை நாடே இல்லா நாதாரி பார்ப்பனர்களால் நடத்தப்படும் ஆர் எஸ் எஸ் ஆட்சி கட்டிலில் அருகதையில்லை வந்தேறி ஆரியர்களுக்கு.

Friday, July 24, 2015

பார்ப்பன பயங்கரவாதிகளால் படுகொலை செய்யப்பட்டவர்!?

ஷஹீத் கூரியூர் முகம்மது அலி ஜின்னா சாஹிப், இவரையும், இவரின் தியாகத்தையும் நம்மிள் எத்தனை பேருக்குத் தெரியும்?.தாழ்த்தப்பட்ட சிலையனாக இருந்து இஸ்லாத்தை தழுவி முகம்மது அலி ஜின்னா'வாக மாறி ஆயிரக்கணக்கான தலித் மக்களை இஸ்லாமியர்களாக மாற்றி சாதி கொடுமைகளிலிருந்து அவர்களை விடுவித்ததால் பார்ப்பன RSS பயங்கரவாதிகளால் படுகொலை செய்யப்பட்டவர்.

இந்தியாவில் பார்ப்பன RSS பயங்கரவாத இயக்கம், தங்கள் கொள்கைக்கு முரணாக இருந்த மகாத்மா காந்தியை கொன்றது போன்றே பிறப்பின் அடிப்படையில் மனிதர்ளை பிரிக்கும் தங்கள் சனாதன தர்மத்துக்கு எதிராக நாட்டின் பல பகுதிகளில் விழிப்புணர்வூட்டி வரும் பல்வேறு முக்கிய பிரமுகர்களை திட்டமிட்டு படுகொலை செய்து வருகிறது .

தமிழகத்தில் கோயமுத்தூர் திருப்பூர் மேலப்பாளையம் திண்டுக்கல் கீழக்கரை மேட்டுப்பாளையம் தென்காசி நாகூர் போன்ற இடங்களில் இந்து முன்னணி போன்ற தேசவிரோத சக்திகளால் பல முஸ்லிம்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர் . இருப்பினும் நேரடியாக RSS பயங்கரவாத இயக்க தலைவர்களால் சதித்திட்டம் தீட்டப்பட்டு கேரளாவில் இருந்து கொலையாளிகள் வரவழைக்கப்பட்டு கொலை செய்யப்பட்டவர்கள் ஷஹீத் கூரியூர் முகம்மது அலி ஜின்னா சாஹிப்[1995] மற்றும் ஷஹீத் பழனிபாபா [1997 ] ஆகிய இருவர் மட்டுமே. 1991 இல் இந்த RSS பயங்கரவாதிகளின் கொலைமுயற்சியில் இருந்து சிறுவெட்டுக்காயங்களோடு தப்பியவர் கோவை S A பாஷா பாய் .
ஆட்சியாளர்களையும் அதிகாரவர்கத்தையும் பலலட்சம் தொண்டர் பலத்தையும் தன் கைக்குள் வைத்துள்ள RSS பயங்கரவாதிகள் இந்தியாவின் கடைக்கோடியில் உள்ள ஒரு சிறுகிராமத்தில் இருந்த 65 வயது முதியவர் கூரியூர் முஹம்மது அலி ஜின்னா சாஹிப்பை கண்டு பயந்து நேரடியாக களத்தில் இறங்கி அவரை கொலை செய்ய காரணம் என்ன ? தொடர்ந்து படியுங்கள்.
1930 இல் ராமநாதபுரம் கீழக்கரைக்கு அருகில் உள்ள பாலையேந்தல் கிராமத்தில் ஒரு தாழ்த்தப்பட்ட சாதியில் ஏழ்மையான குடும்பத்தில் பிறந்தவர் சிலையன். இவர் காவல்துறை பணியில் சேர்ந்த பின்பு கூரியூரை சேர்ந்த வசந்தா என்பவரை திருமணம் செய்தார்.
தமிழ்நாட்டில் இன்றுகூட சாதிவெறி தலைவிரித்தாடுவதற்க்கு டாக்டர் ராமதாஸின் ஆதிக்க சாதி சங்கங்களின் கூட்டமைப்பே சாட்சி . இன்றும்கூட முதலமைச்சர் ஜெயலலிதாவின் சீரங்கம் தொகுதியிலேயே இரட்டைகுவளை முறை உள்ள நிலையென்றால், ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு கிராமங்களில் தாழ்த்தப்பட்ட மக்களை எந்தளவு அடிமைத்தனமாக கேவலமாக நடத்தியிருப்பார்கள் என்பதை நாம் புரிந்துகொள்ள முடியும் .
ஆனால் சிலையன் இந்த சாதிவெறியர்களுக்கு பணிந்து போகாதவர் .இவர் போலீஸ் பணியில் இருந்த போது ஸ்டேஷன் ஏட்டையா '' டேய் ..... ! என்று சாதி பெயரை சொல்லி கூப்பிட்டதால் அந்த ஏட்டையா கன்னத்தில் பளார் என அறைந்ததால் சில காலம் சஸ்பென்ட் செய்யப்பட்டார். காவல்நிலையத்தில் கடைபிடிக்கப்பட்ட சாதிப்பாகுபாட்டை எதிர்த்ததால் அடிக்கடி பணியிட மாறுதல் செய்யப்பட்டு பழிவாங்கப்பட்டார். ஒரு போலீசாராக இருக்கும் தனக்கே தாழ்த்தப்பட்டவன் என்ற காரணத்தால் இவ்வளவு இன்னல்கள் என்றால் தன் சாதியை சேர்ந்த சாதாரண மக்கள் எந்தளவுக்கு துன்பத்தை அனுபவித்து இருப்பார்கள் ஆகவே அவர்களின் முன்னேற்றத்துக்காக போராடவேண்டும் என்று முடிவு செய்து போலீஸ் வேலையை ராஜினாமா செய்துவிட்டு தன் மனைவியின் ஊரான கூரியூருக்கு குடிபெயர்ந்தார் .
கடவுளின் பெயரால் பிறப்பின் அடிப்படையில் சாதிப்பாகுபாடு கற்பிக்கப்பட்டதால் கடவுள் இல்லை என்ற கொள்கையுடைய பொதுவுடைமை கட்சியில் தன்னை இணைத்துக்கொண்டு மேடைகளில் கம்யூனிச சித்தாந்தகளை முழங்க ஆரம்பித்தார் .தன் சமுதாய மக்களுக்காக உழைத்ததினால் பலமுறை சிறை சென்றிருக்கிறார் .
சிலையன் அவர்களுக்கு 12 குழந்தைகள் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு அப்பழுக்கற்ற தலைவனாக இருந்த அதே நேரத்தில் தன் பிள்ளைகளுக்கும் சிறந்த தகப்பனாகவே இருந்தார். விவசாயத்தில் ஈட்டிய சிறுவருமானத்தை கொண்டு அத்தனை குழந்தைகளுக்கும் மிகச்சிறந்த கல்வியை கொடுத்தார் . இவர் குடும்பத்தில் டாக்டர்களும் இன்ஜினியர்களும் அதிகம் .
சிதறுண்டு கிடக்கும் தாழ்த்தப்பட்ட மக்களை ஒன்றிணைக்கும் நோக்கோடு 'உழுதுண்ணும் வேளாளர் சங்கம் ' என்ற சங்கத்தை நிறுவி அதன் மூலம் மக்களை ஒன்று திரட்டியதோடு தாழ்த்தப்பட்ட மக்கள் பாதிக்கப்படும்போது இந்த சங்கத்தின் மூலம் சாதி இந்துக்களின் மொழியிலேயே அவர்களுக்கு பதில் கொடுக்கப்பட்டது .
1980 ம் ஆண்டு ராமநாதபுரம் மாவட்டத்தில் பெரும் சாதி கலவரம் மூட்டப்பட்டது. தாழ்த்தப்பட்ட மக்களின் தலைவரான சிலையனை கொலை செய்ய பெரும் முயற்சி நடந்தது. இந்த கலவரத்தின்போது கம்யுனிஸ்ட் கட்சி கையாலாகாது நின்றது. காவல்துறையினர் தாழ்த்தப்பட்ட மக்களை கொடுமைக்குள்ளாக்கும் போது கட்சி உதவிக்கு வரவில்லை .உயிர் தப்பிய சிலையனையும் மற்ற தலித் தலைவர்களையும் எம்.ஜி.ஆர் அரசு மிஸா சட்டத்தில் கைது செய்தது.
1980-இல் இஸ்லாத்தை தழுவுதல்: மிஸா சட்டத்தில் சிறை பட்டிருந்த சிலையனுக்கு '' ஆட்சி அதிகாரம் பணம் செய்தி ஊடகம் படைபலம் என எல்லா பக்கபலங்களையும் பெற்றிருக்கும் இந்த கேடுகெட்ட சாதி இந்துக்களுக்கு தங்களை கட்டாயமாக அடிமையாக்கிய இந்த கொடுமையின் ஊற்று எது ? என்ற சிந்தனை தொடங்கியது .
மனு ஸ்மிருதியும் பகவத் கீதையும் பிறப்பின் அடிப்படையில் மனிதர்ளை பிராமணன், சத்திரியன், வைசியன், சூத்திரன் என்ற நான்கு வருணங்களாக பிரிக்கின்றன. பிரம்மாவின் நெற்றியில் இருந்து பிறந்தவன் பிராமணன் அதனால் அவன் உயர்வானவன் தோளில் இருந்து பிறந்தவன் சத்திரியன் அவன் பிராமணனை விடவும் தாழ்ந்தவன் பிரம்மாவின் இடுப்பில் இருந்து பிறந்தவன் வைசியன் அவன் சத்திரியனை விடவும் தாழ்ந்தவன் .பிரம்மாவின் காலில் இருந்து பிறந்தவன் சூத்திரன் அவன் அனைவரிலும் தாழ்ந்தவன் ஆக இந்துமத வேதங்கள் கூறியுள்ள வருணங்களின் அடிப்படையில் சூத்திரனாக பிறந்து அடிமையாக்கப்பட்ட ஒருவன் அந்த மதத்தில் இருந்து கொண்டே இழிநிலையிலிருந்து விடுபட வாய்ப்பே இல்லை .

இவர் இளையமகன் சுல்தான் பாரி அவர்களின் கூற்றுப்படி ....'' சிலையனாக சிறைக்கு சென்ற என் தந்தை அங்கு திருகுரானை நன்கு படித்து முஸ்லிமாக மாறி '' முகமது அலி ஜின்னா 'வாக கூரியூருக்கு திரும்பி வந்தார் .திருமணமாகி சென்ற சகோதரிகள் உட்பட குடும்பத்தினர் அனைவரையும் ஒன்றுகூட்டி  '' என் குழந்தைகளே !! வறுமைக்கு இடையிலும் ஒரு தந்தையாக உங்களுக்கு நல்ல கல்வியை கொடுத்திருக்கிறேன் ,உங்களுக்கு சிந்திக்கும் அறிவு இருக்கிறது  இந்துமத வேதங்களில் நம்மை கடவுளின் காலில் பிறந்த சூத்திரன் என்று குறிப்பிட்டு கட்டாயமாக அடிமைபடுத்தி இழிவுபடுத்தி வைத்துள்ளது பிறப்பின் அடிப்படையில் மனிதர்களுக்கு இடையே உயர்ந்தவன் தாழ்ந்தவன் என்ற பாகுபாடு செய்யும் இந்துமத வேதங்கள் நிச்சயம் இறைவனின் வேதமாக இருக்கமுடியாது . நான் சிறையில் திருக்குர்-ஆனை படித்தேன். அதில் '' மனிதர்களில் யார் உயர்ந்தவன் தாழ்ந்தவன் ? என்று கூறுவதை கேளுங்கள்.

'‘மனிதர்களே, நிச்சயமாக நாம் உங்களை ஒரு ஆண், ஒரு பெண்ணிலிருந்து படைத்தோம். நீங்கள் ஒருவரை ஒருவர் அறிந்து கொள்ளும் பொருட்டு. பின்னர், உங்களைக் கிளைகளாகவும், கோத்திரங்களாகவும் ஆக்கினோம். (ஆகவே) உங்களில் எவர் மிகவும் பயபக்தியுடையவராக இருக்கிறாரோ, அவர் தாம் இறைவனிடத்தில் , நிச்சயமாக மிக்க கண்ணியமானவர். நிச்சயமாக இறைவன் நன்கறிபவன், (யாவற்றையும் சூழ்ந்து) தெரிந்தவன்.’ (அல்-குர்ஆன் 49:13)

நாம் படைக்கப்பட்ட நோக்கத்தை தெளிவாக கூறியுள்ள இது இறைவனின் வசனம் தான் என்பதை நான் உறுதியாக நம்புகிறேன் .அதனால் நாம் முஸ்லிமாக மாறிவிட்டேன் . நான் இந்த சத்திய பாதைக்கு மக்களை அழைக்க போகிறேன். அதற்கு முன்பாக என்னுடைய வீட்டிலிருந்து இந்த பணியை தொடங்குகிறேன் . சத்திய பாதையான இஸ்லாத்துக்கு வாருங்கள் ! '' என்று என் தந்தை எங்களிடம் கூறினார் .
என் தந்தையின் வார்த்தைகளில் அவ்வளவு உறுதி இருந்தது . அதை எங்களால் மறுக்க முடியவில்லை . திருமணம் செய்து கொடுக்கப்பட்டிருந்த சகோதரிகளின் குடும்பத்தினர் உட்பட அனைவரும் இஸ்லாத்துக்கு வந்த பின்பு தான் கூரியூர் கிராம மக்களிடம் இஸ்லாம் மார்க்கத்தை அறிமுகம் செய்தார் . அதுவரை கூரியூரில் ஒரு முஸ்லிம் கூட கிடையாது . என் தந்தையின் அழைப்பு பணிக்கு பிறகு நூற்றுக்கணக்கான கிராமமக்கள் இஸ்லாத்தை தழுவினர் . என் தந்தையின் 15 ஆண்டுகால அழைப்பு பணியில் சுமார் 40 ஆயிரம் மக்களை இஸ்லாத்தின் பால் ஈர்த்துள்ளார் ..
'' வேலூரில் ஜமாத்தே இஸ்லாமி இயக்கம் நடத்திவந்த தாவா சென்டர் மூலம் இவர்களுக்கு கலீமா [ வணக்கத்துக்குரியவன் ஒருவனே .அவன் தூதர் முகம்மது [ஸல்] சொல்லிக்கொடுக்கப்பட்டு அடிப்படை இஸ்லாமிய பயிற்சியும் அளிக்கப்பட்டது .பின்பு தன் சொந்த மக்களை தமிழகத்தின் தலைசிறந்த இஸ்லாமிய கல்விக்கூடங்களுக்கு [ மதரசாக்கள் ] அனுப்பிய இஸ்லாத்தை அதன் தூய வடிவில் கற்றுவர செய்தார் .
ஆண்டாண்டுகாலமாக தங்களுக்கு அடிமைப்பட்டு கிடந்த தலித் மக்கள் இந்தியாவின் தென்கோடி மூலையில் சாரைசாரையாக இஸ்லாத்தை நோக்கி செல்வதை கண்ட பார்ப்பன RSS கும்பல் ஓடோடி வந்து '' ''எதை வேண்டுமானாலும் செய்யுங்கள் ,ஆனால் இஸ்லாத்துக்கு போகாதீர்கள் '' என கெஞ்சினார்கள் . ஆரிய சமாஜம், சுத்தி மார்க்கம் மூலமாக ''தாய் மதம் திரும்புங்கள் ''என வீடுவீடாக சென்று அழைத்தார்கள் .ஒருவர் கூட கதவை திறக்கவில்லை .
அப்போது ஆர்.எஸ்.எஸ் பயங்கரவாதிகளோடு நெருக்கமாக இருந்த எம்ஜியார் அரசு அதிகாரிகளை அனுப்பி '' உங்களுக்கு இலவச கறவை மாடுகள் அரசு நிலம் வீடுகள் தருகிறோம் ''என ஆசைகாட்டிப்பார்த்தார்கள். இவர்கள் மனம் மாறவில்லை கடைசியில் மிரட்டிப்பார்த்தார்கள் .'' உங்களால் முடிந்ததை பார்த்துக்கொள்ளுங்கள் ''என்று ஜின்னா சாஹிப் கூறிவிட்டார் .
ஜின்னா சாஹிப் அவர்களுக்கு உறுதுணையாக இருந்த ஜமாத்தே இஸ்லாமி வேலூர் தாவா சென்டர் நிர்வாகிகள் ஒரு கட்டத்தில் அரசு அதிகாரிகளால் மிரட்டப்பட்டதால் அவர்களும் தங்கள் பணியை நிறுத்தி வைத்தனர் துவண்டுவிடவில்லை ஜின்னா சாஹிப் .தன் சமுதாயத்திற்கு நல்வழிகாட்ட* கூரியூரில் ஒரு பள்ளிவாசல் கட்டி அங்கு அந்த மக்களுக்கு அழகிய முறையில் இஸ்லாத்தை அறிமுகம் செய்தார் .
தன் சிறுவயதில் ராமநாதபுரம் அக்ரஹாரத்தின் வழியே நடந்து சென்ற ஒரே காரணத்துக்காக ஓடஓட விரட்டி அடிக்கப்பட்ட சிலையனுக்கு ஆழமான காயம் மனதில் ஏற்பட்டது பின்னாளில் ஜின்னா சாஹிப்பாக மாறியவுடன் எந்த அக்கிரகாரம் ஓடஓட விரட்டியதோ அதே அக்கிரஹாரத்தின் மையப்பகுதியில் ஒரு வீட்டை விலைக்கு வாங்கி குடியேறினார் .
தனக்கு நேர்ந்த இந்த கொடுமைகளை தனது சமுதாயம் தொடர்ந்து அனுபவிக்க கூடாது என்ற உந்துதலில் இஸ்லாத்தின் பக்கம் மக்களை அழைத்தார் . ஜின்னா சாஹிப்பின் முனைப்பான பிரசாரத்தால் நாளுக்குநாள் கிராமம் கிராமமாக மக்கள் இஸ்லாத்தை நோக்கி வந்தனர் . இதனால் எம்.ஜி.ஆர் அரசு அவரை மீண்டும் மிசா சட்டத்தின் கீழும் பல்வேறு பொய் வழக்குகளின் கீழும் சிறையில் அடைத்தனர். சுமார் 35 வழக்குகள் அவர் மீது போடப்பட்டும் அவரின் வேகம் அதிகரித்தால் அரசு அதிகாரி தங்கள் முயற்சியை கைவிட்டனர் .
ஜின்னா சாஹிப்பின் இஸ்லாமிய அழைப்பு பணியை எம்ஜியார் அரசு மூலம் சட்டரீதியாக தடுக்கமுயன்ற RSS கும்பல் தோல்வியை சந்தித்ததால் வேறொரு வழியை கையாண்டது. சாதிரீதியான தங்களின் ஆதிக்கத்திற்கு ராமநாதபுரம் மாவட்ட கிராமங்களில் சவப்பெட்டி தயாராவதை கண்ட RSS கும்பல் மார்ச் 18.1995 இல் ராமேஸ்வரத்தில் '' மதமாற்றம் எதிர்ப்பு மாநாடு '' என ஒன்று கூடினர் .அங்கு பேசிய அனைவருமே மதமாற்றங்களுக்கு முக்கிய காரணமே '' கூரியூர் முஹம்மது அலி ஜின்னா '' தான் என குறிப்பிட்டனர் .மாநாடு முடிந்ததும் மதமாற்றங்களுக்கு காரணமாக இருக்கும் தமிழகம் முழுவதும் உள்ள முஸ்லிம் பிரமுகர்கள் செயல் வீரர்களை அடிப்படையாக வைத்து கொலைப்பட்டியல் தயார் செய்தனர் அதில் முதல் பெயர் '' கூரியூர் ஜின்னா.
''20.4.95 வியாழன் அன்று ராமநாதபுரத்தில் இரவு தொழுகை முடித்துவிட்டு TVS சேம்ப் வண்டியில் கூரியூரிலுள்ள வீட்டுக்கு திரும்பி வந்துகொண்டிருந்தார் .இரவு 8.30 மணிக்கு கூரியூர் மசூதிக்கும் அவர் வீட்டுக்கும் இடையில் அடைக்கலம் காத்தான் என்ற பகுதியில் உள்ள கோவிலை நெருங்கியதும் ''அத்தா ! கொஞ்சம் நில்லுங்க .'' என்று பழக்கப்பட்ட குரல் கேட்டதும் கொஞ்சம் வண்டியை நிறுத்திய ஜின்னா சாஹிப்பை மூன்று பேர் சரமாரி வெட்டிவிட்டு ''ஓம் காளி ! ஜெய் காளி ! என ஊளையிட்டுக்கொண்டே ஓடினார்கள். வெட்டுக்காயங்களுடன் தட்டுதடுமாறி தன் வீட்டுக்கு வந்து அழைப்பு மணியை அழுத்திவிட்டு ''அல்லாஹு அக்பர் ! '' என சாய்ந்தார் பயோனியர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர் நள்ளிரவு 12.30 மணிக்கு மலர்ந்த முகத்துடன் இறைவனடி சேர்ந்தார் .
இவர் உடலடக்கதிற்கு சாதிமத பேதமின்றி மக்கள் திரண்டதால் ராமநாதபுரத்தில் 4 மணி நேரம் போக்குவரத்து ஸ்தம்பித்தது . தங்கள் அன்பிற்கினிய சகோதரன் RSS பார்ப்பன கும்பலால் கொலை செய்யப்பட்டத்தை கண்டு தாழ்த்தப்பட்ட மக்களும் வெகுண்டெழுந்துள்ளதால் பின் விளைவுகள் பயங்கரமானதாக இருக்கும் என உளவுத்துறை அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்ததன் காரணமாக மதுரை இந்து முன்னணி அலுவலகத்தில் வைத்து கொலையாளிகள் போலீஸ் வசம் ஒப்படைக்கப்பட்டனர். வழக்கம் போலவே இந்த கொலையிலும் நீதிமன்றத்தால் அவர்கள் தண்டிக்கப்படவில்லை .
ஜின்னா சாஹிப்பை கொலை செய்ய சதித்திட்டம் தீட்டி கொலையாளிகளை ஏவிவிட்ட முக்கிய RSS பிரமுகர்கள் கைது செய்யப்படவே இல்லை. இக்கொலையில் மூளையாக செயல்பட்டதாக சந்தேகிக்கப்பட்ட ராமநாதபுரம் RSS தலைவர் வழக்கறிஞர் குப்புராம் என்பவர் அவர் வீட்டில் வைத்து வெட்டப்பட்டார் .
இந்த வழக்கில் தாழ்த்தப்பட்டவனாக இருந்து இஸ்லாத்தை தழுவிய சகோதரன் அப்துல்லாஹ் மற்றும் ஏர்வாடி காசிம் ஆகியோர் கைது செய்யப்பட்டு சுமார் ஏழாண்டு சிறைதண்டனை வழங்கப்பட்டனர் .
RSS பயங்கரவாதிகளால் வெட்டப்பட்டு தலையில் வெட்டுக்காயம் ஏற்பட்டபோதும் கொலையாளிகளை விரட்டி சென்ற கோவை S A பாஷா அவர்களின் மகளைத்தான் RSS பயங்கரவாதிகளால் ஷஹீதாக்கப்பட்ட ஜின்னா சாஹிப் அவர்களின் மகன் திருமணம் செய்துள்ளார் .
ஜின்னா சாஹிப்பை வெட்டி வீழ்த்திய பார்ப்பன RSS கும்பலால் அவர் விதைத்து விட்டு போன செய்தியை வீழ்த்த முடியவில்லை .அவர் சிலையனாக இருந்த போது எந்த அக்கிரகாரத்தில்நடந்து சென்றதுக்காக ஓடஓட விரட்டி அடிக்கப்பட்டாரோ அதே அக்கிரகாரத்தில்அவர் ''முஹம்மது அலி ஜின்னா ''வாக மாறிய பின்பு அங்கு ஒரு வீடு வாங்கி குடியேறினார் .அவர் வழியில் அவர் மக்கள் அந்த அக்கிரகாரத்தில் ஒரு மசூதியே கட்டி இஸ்லாமிய அழைப்பு பணி செய்து வருகிறார்கள் .

Sunday, June 7, 2015

மேகி தடை வெரும் அரசியல் ஆட்டம்!?

மேகி நூடல்ஸ் உடலுக்கு ஆபத்தானது எனவே அமிதாப், மாதுரி, ப்ரீத்தி உள்ளிட்ட நடிகர் நடிகையருக்கு நோட்டிஸ் அனுப்பப்பட்டு கைது வாரண்ட் பிறக்கும் நிலை உள்ளதாக அனைத்து ஊடகங்களீலும் செய்தி வருகிறது. முகனூலிலும் கூட அமிர்தா காலேஜ் குறித்த விளம்பரத்தில் ராதிகாவை விமர்சித்து வருகின்றனர்.
நடிகர் நடிகைகளூக்கு சமூகப் பொறுப்பு உள்ளது! அவர்களை நேசிக்கும் மக்கள் அவர்களின் விளம்பரத்தால் வீழ்ந்து விடுவது உண்மை! அவர்கள் தவறான பரிந்துரை செய்வது தவறு என்றாலும் அவர்களுக்கு மட்டும் தான் சமூகப் பொறுப்பு உள்ளதா? மற்றவர்களுக்கு இல்லையா.
இதை ஊடகங்களில் விளம்பரம் செய்து பல கோடி மக்களீடம் சேர்க்கும் ஊடகங்களுக்கு பொறுப்பு இல்லையா? அதில் பிரச்சனை வந்தால் அதையும் விவாதாமாக்கி காசு பார்க்கும் உங்களை கைது செய்ய வேண்டமா.
மேலும் இதற்கு அனுமதி வழங்கிய இந்திய உணவுத் தரக் கட்டுப்பாடு கழக அதிகாரிகள் தண்டிக்கப் பட வேண்டாமா?

இதை விட மோசமான ஆபத்தை விளைவிக்கும், புகையிலை, போதைப்பாக்கு, மது உள்ளிட்ட பொருட்களை அனுமதிக்கும் அரசுக்கும் , அதை ஆளுகின்ற வர்கத்துக்கும் தண்டனை இல்லையா?தயாரிக்கும் இடத்தில் தடுப்பதை விட்டு விட்டு தயாரித்தவனுக்கு தண்டனை வழங்குவதை விட்டு, அனுமதி வழங்கிய அரசு அதிகாரிகளை விட்டு விட்டு நடித்தவன், விற்றவன், வாங்கியவன் , பயன் படுத்துதுபவனை தண்டிக்கும் கேடுகெட்ட சட்டங்களை வைத்து எந்தத் தீமையையும் தடுக்க முடியாது.

@ பான் பராக் தயாரிப்பவனை விட்டுவாங்களாம்!  விற்கிறவனைப் பிடிப்பாங்களாம்.

சிகரெட் தயாரிப்பவன் விற்பவனை விட்டுடுவாங்களாம்! பொது இடத்தில் புகைப் பிடிப்பவனை பிடிப்பாங்களாம்.

@ பிளாஸ்டிக் பை தாயாரிக்கிறவனை விட்டுடுவாங்களாம்! கடையில் வைத்து சில்லறையில் விற்பவனை பிடிப்பாங்களாம்.

@  மதுவை அரசாங்கமே தயாரித்து விற்பாங்களாம்! அதைக் குடிச்சிட்டு வண்டி ஓட்டினா பிடிப்பாங்களாம்.

@ கட்டிடம் இடிந்தால் கட்டினவனை பிடிப்பங்களாம்! ஆனால் காசு வாங்கிக் கொண்டு அனுமதித்த அதிகாரிகளை விட்டுவாங்களாம்.

@ செம்மரத்தை கடத்துறவனை விட்டுடுவாங்களாம்! கூலிக்கு மரம் வெட்டுறவனை சுட்டுருவாங்களாம்!


குஜராத்தில் பல ஆயிரம் இஸ்லாமியர்களை கொள்ள காரணமாயிருந்த மோடி அயோக்கியன் இன்று பிரதமர். ஒரு நீதிபதியை வைத்து இவர் (தமிழக முதவர்) குற்றவாளி என்பார்கள் வேறொரு நீதிபதியை வைத்து குற்ற மற்றவர் என்பார்கள் போங்கடா நீங்களும் உங்க சட்டமும்.

மேகிக்கு தடை என்பதெல்லாம் வெரும் அரசியல் ஆட்டம் தான். அப்படி அது உண்மையாகவே மக்கள் மீதான அக்கறை என்றால் பல மருந்துகளில்  ‬தொடங்கி நாம் தினமும் குடிக்கும் பாட்டில் தண்ணீர் வரை இந்தியாவில் விற்பனை செய்யப்படும் பாதிக்கும் மேற்பட்ட பொருட்களை தடை செய்ய வேண்டும்.

என்று அழகிற்கு ஆடை ஆனதோ அன்று இழந்தோம் நம் கற்பை.. என்று மதிப்பெண்களுக்கு கல்வி ஆனதோ அன்று இழந்தோம் நல்மதியை. என்று சினிமா அரசியல் ஆனதோ அன்று இழந்தோம் நல்லாட்சியை.

Saturday, May 9, 2015

பொருளாதாரத்தை நிர்ணய்க்கும் மசகு!?

ஒரு நாட்டின் பொருளாதாரத்தை நிர்ணயம் செய்வதில் கச்சா or மசகு எண்ணெய் மிக முக்கிய பங்கு வகிக்கிறது என்பதில் எவர்க்கும் மாற்றுக்கருத்து இருக்க வாய்ப்பில்லை என்று கருதுகிறேன். ஏனெனில் ஒவ்வொரு முறை கச்சா எண்ணெயின் விலை உயரும்போதும் அது உலகளவில் அனைத்து நாடுகளின் பொருளாதாரத்திலும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்திவிடுகிறது. உலக நாடுகளின் பொருளாதாரத்தை நிர்ணயிக்கும் அதி முக்கிய காரணியான இந்த கச்சா எண்ணெய்யை உலகில் முதன் முதலில் பயன்படுத்தியவர்கள் யார் தெரியுமா நண்பர்களே?. தற்போது ஈராக்கியர்கள் என்ற பெயரில் அழைக்கப்படும் பண்டைய பாபிலோனியர்கள் தான் கச்சா எண்ணையை உலகில் முதன் முதலில் பயன்படுத்தியவர்கள் ஆவர். 

அதைப்பற்றி தெரிந்துகொள்வதற்கு முன்பு முதலில் கச்சா or மசகு எண்ணெய் எப்படி உருவாகிறது என்று பார்ப்போம் வாருங்கள். கோடிக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு இயற்கை பேரிடர் காரணமாக மண்ணில் புதையுண்டு இறந்த மனிதர்கள் மற்றும் விலங்கினங்களின் உடல்கள் அழுகி (decompose) பாக்டீரியாக்களால் நொதிக்கப்பட்டு, பின்பு மண்ணில் உள்ள உப்புக்களுடன் சேர்ந்து வேதிவினைபுரிந்து., நிலத்திற்கு அடியில் நிலவும் உயர் அழுத்தம் மற்றும் வெப்பம் காரணமாக அருகிலுள்ள பாறை வெடிப்புகளுக்குள் பாய்ந்து அடர் கருப்பு நிறத்தை கொண்ட எண்ணெய் வளங்களாக உருமாறுகின்றது.

இந்த எண்ணெய் வளங்களை உலகில் முதன் முதலில் கண்டறிந்தவர்கள் ஈராக்கியர்கள் என்னும் பண்டைய பாபிலோனியர்கள் ஆவர். பண்டைய பாபிலோனியர்கள் சுமார் மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு தங்களது மண்ணில் வானுயர்ந்த கோபுரங்களை கட்டும்போது, கட்டிடத்தின் வலிமையை கருத்தில் கொண்டு கட்டிடத்தின் அஸ்திவாரச்சுவரை (Foundation Wall) நிலத்தில் சற்று ஆழத்திலிருந்து கட்டி எழுப்பினார்கள். அப்படி ஒரு சமயம் ஈராக்கிலுள்ள Andericca (Near Babylon Province) என்ற இடத்தில் ஒரு கட்டிடத்தின் கட்டுமானதிற்க்காக சற்று ஆழமாக குழி தோண்டியபோது கிடைத்ததுதான் இந்த கச்சா எண்ணெய் (Crude oil).

கச்சா or மசகு எண்ணெய் சேர்த்து கட்டப்பட்ட சுவர்கள் கரையான்கள், எறும்புகள் மற்றும் பூச்சிகளின் தாக்குதல்களிலிருந்து தப்பிக்கொள்வதை தற்செயலாக ஒரு நாள் கண்டுபிடித்த பாபிலோனியர்கள் அதன் பின்னர் கச்சா எண்ணெய்யை வெகுநேரம் கொதிக்கவைத்து வற்றச்செய்து கிடைத்த கூழ்மத்தை (நிலக்கீல், Asphalt) நிலத்திற்குள் மறையும் கட்டிடத்தின் அஸ்திவாரச் சுவர்களின் மீது சாயமாக (paint) பூசினார்கள். அதோடு கச்சா எண்ணையின் எரியும் திறனை கருத்தில் கொண்டு வெளிச்சத்தை உண்டாக்க தீபந்ததிற்க்குரிய எண்ணெய்யாகவும் பயன்படுத்தியிருக்கிறார்கள். இதனை ஹீரோட்டஸ் (Herodus – கி.மு.484) மற்றும் டியோடோரஸ் (Diodorus – கி.மு. 60) என்ற இரு புகழ்பெற்ற கிரேக்க வரலாற்று ஆசிரியர்கள் தங்களது ஆய்வுகட்டுரைகளில் ஆதாரத்துடன் தெரிவிக்கிறார்கள்.

எல்லோருக்கும் தெரிந்த உலகின் முதல் நவீன எண்ணெய் கிணறு கி.பி.347 ஆம் ஆண்டு சீனாவில் துளையிடப்பட்டது. மூங்கில் கம்புகளால் துளையிடப்பட்ட அந்த கிணறு கிட்டத்தட்ட 800 அடி ஆழம் கொண்டதாக இருந்தது. கி.பி. ஏழாம் நூற்றாண்டு வரை கச்சா எண்ணெய் விளக்கு எரிப்பதற்கு தேவைப்படும் விளக்கு எண்ணெயாகவும் கட்டிடகட்டுமான பணிகளில் நிலக்கீலாகவும் தான் பயன்படுத்தப்பட்டது. கி.பி. ஒன்பதாம் நூற்றாண்டு வாக்கில் நிலக்கீலைக் கொண்டு ஈராக் தலைநகர் முழுவதும் அழகான சாலைகள் அமைக்கும் பணி துவங்கியது. உலகில் முதன் முதலாக நிலக்கீல் (asphalt) கொண்டு சாலைகள் போடப்பட்டது ஈராக் தலைநகர் பாக்தாத்தில் தான்.

இதனை தொடர்ந்து அரபுநாடுகள் முழுவதிலும் கச்சா எண்ணெய் கிடைக்கும் இடங்களை தேடும் பணி துவங்கியது கி.பி. பத்தாம் நூற்றாண்டுவாக்கில் அபு அல் ஹாசன் (Abu Al Hasan) என்ற முஸ்லிம் புவியியல் வல்லுநர் அஜர்பாஜன் (Azerbaijan) என்ற நாட்டிளிலுள்ள பாகு (baku) என்ற இடத்தில் அதிக அளவில் எண்ணெய் வளங்கள் இருப்பதை கண்டறிந்தார். இதைத்தொடர்ந்து பாகுவில் நூற்றுக்கும் அதிகமான எண்ணெய் கிணறு வெட்டப்பட்டது. உலகிலேயே முதன் முதலாய் அதிக எண்ணிக்கையில் ஒரே இடத்தில் எண்ணெய் கிணறு வெட்டப்பட்ட இடம் அஜர்பாஜன் நாட்டிளிலுள்ள பாகுவில்தான்.

இந்நிலையில் ஜப்பான் நாட்டை சேர்ந்த சில ரசவாதிகள் (alchemist) கச்சா எண்ணெய்யை சூடுபடுத்தும்போது எரியும் தன்மை கொண்ட நீர் (kerosene) கிடைப்பதாக கூறினார்கள். இதைத்தொடர்ந்து முகம்மது இபின் ஷகாரியா அல்-ரஷி (Muhammed Ibn Zakariya Al-Razi, கி.பி.865-925) என்ற பெர்சியன் ரசவாதி (Persian alchemist) கச்சா or மசகு எண்ணெய்யை வடிகட்டும் முயற்சியில் இறங்கினார். இதற்க்காக இவர் தானே தயாரித்த அலம்பிக் (alembic) என்ற ஒரு வகை வடிகலனை பயன்படுத்தினார். முயற்சியின் விளைவாக வெடித்து எரியும் நீரைக் (petrol) கண்டறிந்தார்.

இவரது இந்த கண்டுபிடிப்பு பெர்சிய ராணுவத்தினரால் எதிரி நாட்டு ராணுவத்தினரை தாக்க வெடிபொருளாக பயன்படுத்தப்பட்டது. இதைத்தொடர்ந்து கச்சா எண்ணையின் முக்கியத்துவம் உணரப்பட்டு உலகமெங்கும் எண்ணெய் வளங்கள் கிடைக்கும் இடங்களை கண்டறியும் சோதனை துவங்கியது. பனிரெண்டாம் நூற்றாண்டில் மேற்கு ஐரோப்பாவிலும் பதிமூன்றாம் நூற்றாண்டில் ரோமானியாவிலும் எண்ணெய் கிடைக்கும் இடங்கள் கண்டறியப்பட்டது. பதினேழாம் நூற்றாண்டில் (1753-ஆம் ஆண்டு) முதன் முதலாக அமெரிக்காவின் பெனிசுலவேனியா (Pennsylvania) நகரிலும், பின்னர் பிரான்ஸிலுள்ள அல்சசே (Alsace) என்ற நகரிலும் எண்ணெய் வளங்கள் இருப்பது கண்டறியப்பட்டது.

பதினேழாம் நூற்றாண்டின் துவக்கத்தில் ரஷ்யாவிலுள்ள உக்தா (ukhta) என்ற இடத்தில் அதிக அளவில் எண்ணெய் வளங்கள் இருப்பது கண்டறியப்பட்டது. இதை தொடர்ந்து ரஷ்ய சக்கரவர்த்தினி (Empress) எலிசபெத் என்பவருடன் உதவியோடு உலகின் முதல் கச்சா எண்ணெய் வடிப்பு ஆலை உக்தாவில் நிறுவப்பட்டது. இந்த ஆலை கிட்டத்தட்ட இபின் ஷகாரியாவின் வடிகட்டுதல் முறையை அடிப்படையாக கொண்டிருந்தது. இதன் மூலம் வடிகட்டப்பட்ட எண்ணெய்., ரஷ்ய நாட்டு தேவாலயங்களிலும் (church), மடாலயங்களிலும் (monasteries) விளக்கு எரிப்பதற்காக பயன்படுத்தப்பட்டது.

இந்நிலையில் 1846 ஆம் ஆண்டு ஆப்ரஹாம் ஜெஸ்னர் (Abraham Pineo Gesner) என்ற கனடா நாட்டை சேர்ந்த நிலவியல் வல்லுநர் உலகில் முதன் முதலாக நிலக்கரியிலிருந்து மண்ணெண்ணெய்யை பிரித்தெடுக்கும் தொழில்நுட்பத்தை கண்டறிந்தார். அதோடு மண்ணெண்ணெய்யில் எரியும் விளக்குகளையும் உருவாக்கி இருளில் மிதந்திருந்த உலகத்திற்கு ஒரு வெளிச்சத்தை காட்டினார். அதைத் தொடர்ந்து மண்ணெண்ணெய்யின் தேவை பன்மடங்கு அதிகரிக்க துவங்கியது. நிலக்கரியிலிருந்து பிரித்து எடுக்கப்பட்ட மிகக்குறைந்த மண்ணெண்ணெய் மனிதர்களின் மிகப்பெரிய தேவையை பூர்த்தி செய்ய இயலாததால் மாற்று வழி பற்றி யோசிக்கப்பட்டது.

கச்சா or மசகு எண்ணெய்யை சூடுபடுத்தி கிட்டத்தட்ட மூன்றிக்கும் மேற்பட்ட எண்ணெய்களை பிரித்தெடுக்கலாம் என்கிற உண்மையை உலகில் முதன் முதலாக 1846 ஆம் ஆண்டு போலந்து நாட்டை சேர்ந்த Lgnacy Lukasiewicz என்ற வேதியியல் வல்லுநர் கண்டறிந்தார் இவர் தான் முதன் முதலில் கச்சா எண்ணெய்யிலிருந்து மண்ணெண்ணையை பிரித்தெடுக்கும் தொழில் நுட்பத்தினை கண்டுபிடித்தவர் ஆவர். இதை தொடர்ந்து மண்ணெண்ணெய் தயாரித்து விற்பதற்கென்று வணிக நோக்கிலான உலகின் முதல் எண்ணெய் கிணறு போலந்து (Poland) நாட்டில் 1853 ஆம் ஆண்டு வெட்டப்பட்டது. இதற்க்கிடையில் முக்கிய திருப்பமாக 1854 ஆம் ஆண்டு கச்சா எண்ணெயிலிருந்து குறிப்பிட்ட வெப்ப நிலையில் பெட்ரோலை பிரித்தெடுக்கும் தொழில்நுட்பத்தினை பெஞ்சமின் சில்லிமன் (Benjamin Silliman) என்ற அமெரிக்கர் கண்டறிந்தார்.

இவரது இந்த கண்டுபிடிப்பு காட்டுத்தீயைப் போல் மிகவேகமாக உலகமெங்கும் பரவத்தொடங்கியது. உலகின் முதல் வணிக நோக்கிலான எண்ணெய் சுத்தீகரிப்பு ஆலை போலந்து நாட்டிலுள்ள ஜாஸ்லோ (jaslo) என்ற நகரில் Lgnacy Lukasiewicz-யின் மேற்பார்வையின் கீழ் 1856 ஆம் அண்டு துவங்கப்பட்டது. அந்த ஆலையில் தான் முதன் முதலாக கச்சா எண்ணெயிலிருந்து ஒன்றிக்கும் மேற்பட்ட பொருட்கள் பிரித்தெடுக்கப்பட்டன. 

பெட்ரோல் (Gasoline), மண்ணெண்ணெய் (Kerosene), டீசல் (Diesel), மசகு எண்ணெய் (lubricating Oil) மற்றும் நிலக்கீல் (Asphalt) ஆகிய ஐந்து பொருட்கள் குறிப்பிட்ட வெப்பநிலையில் காய்ச்சி வடித்து பிரித்தெடுக்கப்பட்டது.இதில் டீசலுக்கு மட்டும் டீசல் என்ற பெயரிடப்படாமல் ஆயில் என்றே பெயரிடப்பட்டிருந்தது. இந்நிலையில் 1893 ஆம் ஆண்டு ருடால்ப் டீசல் (Rudolf Diesel) என்பவர் டீசலில் இயங்கும் வகையில் ஒரு என்ஜினை கண்டறிந்தார் அவரது கண்டுபிடிப்பை போற்றும் வகையில் டீசல் என்கிற அவரது பெயரையை அந்த எரிபொருளுக்கு சூட்டப்பட்டது. 

உலகின் இரண்டாவது கச்சா எண்ணெய் சுத்தீகரிப்பு ஆலை 1857 ஆம் ஆண்டு ரோமானியா (Romania) நாட்டிலுள்ள Ploiesti என்ற நகரில் ஏற்படுத்தப்பட்டது. அதைத்தொடர்ந்து உலகம் முழுவதும் கொஞ்சம் கொஞ்சமாக ஒவ்வொரு நாடாக சுத்தீகரிப்பு ஆலைகள் கட்டப்பட்டது. இதில் குறிப்பிடப்பட வேண்டிய முக்கியமான விஷயம் என்னவென்றால்.

ரோமானியாதான் உலகில் முதன் முதலாக கச்சா or மசகு எண்ணெய்யை வெளிச்சந்தையில் விற்பனை செய்த முதல் நாடு ஆகும். ரோமானியா மொத்தமாக 275 டன் கச்சா or மசகு எண்ணெய்யை முதன் முதலாக வெளிச்சந்தையில் விற்பனை செய்தது.


Saturday, April 18, 2015

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கின்ற ஆன்டி-ஆக்ஸிடன்!?

உடலுக்கு நல்ல ஆரோக்கியத்தையும் சுறுசுறுப்பையும் இஞ்சி கலந்த டீ-யின் மூலம் பெற முடியும் என்பது உங்களுக்குத் தெரியுமா?

குளிர் மிகுந்த நேரத்தில் ஒரு கப் சூடான இஞ்சி டீயை விட சிறந்த பானம் எதுவாகவும் இருக்க முடியாது. அதிக அளவு வைட்டமின் சி, மெக்னீசியம், மற்றும் இதர கனிமங்களை கொண்ட இஞ்சி வேரை சாப்பிடுவது உடம்பிற்கு நன்மை விளைவிக்கும்.

மிகுந்த சுவையை கொடுக்கும் இந்த இஞ்சி டீ, உங்களுக்கு மிகவும் பிடித்த பானமாக மட்டுமல்லாமல் அது குளிர் காலத்தில் வரும் உடல் தொடர்பான பிரச்சனைகளுக்குபெரும் தீர்வாகவும் உள்ளது. ஆகையால் இதை ஒரு மருந்துப் பொருளாகவும் இஞ்சியைக் கருதுகின்றனர்.

அதிலும் இஞ்சி டீ யை செய்ததும், அதனுடன் பெப்பர் மின்ட் (மிளகு கீரை), தேன் ஆகியவற்றை கலந்து டீயை அருந்தலாம். இதனால் இஞ்சியின் சுவை சற்றே மறைந்து காணப்படும். அதுமட்டுமில்லாமல் டீயின் சுவையும் மிகைப்படும். இப்போது நாம் ஏன் இஞ்சி டீயை அவசியம் குடிக்க வேண்டும் என்பதற்கான பதில் இதோ.

செரிமானத்தை மிகைப்படுத்தும் செரிமானத்தை மிகைப்படுத்தி உண்ட உணவை ஈர்த்துக் கொள்ள உதவி செய்கின்றது. அதிலும் நிறைய சாப்பிட்ட பின் இதை அருந்துவது உகந்தது.

வீக்கத்தை குறைப்பது தசை மற்றும் இதர பிடிப்புகளை தீர்க்கும் வீட்டு மருந்தாக இவை அமைகின்றது. இஞ்சியின் தன்மை வீக்கத்தை குறைப்பதே ஆகும். இஞ்சியை டீயாக மட்டுமல்லாமல் வீக்கமுள்ள இடங்களில் ஒரு பச்சிலை போன்று இடுவதும் வீக்கத்தை குறைத்து நிவாரணம் தரும்.

சுவாச பிரச்சனைகளை நீக்குதல் தொண்டை அடைப்பு மற்றும் சளி சார்ந்த பிரச்சனைகளுக்கு நல்ல நிவாரணம் இஞ்சி டீயாகும். அந்தந்த காலத்திற்கேற்ப வரும் சளி, இருமல் ஆகியவற்றால் வரும் சிரமங்களுக்கு இது ஒரு சிறந்த மருந்தாகும்.

இரத்த ஓட்டத்தை சீர் செய்யும் வைட்டமின்கள், கனிமங்கள் மற்றும் அமினோ அமிலங்கள் இஞ்சி டீயில் இருப்பதால், அவை இரத்த ஓட்டத்தை சீர் செய்ய உதவுகின்றன. இது கொழுப்புகளை இரத்த குழாய்களில் தங்க விடாமல் பார்த்துக் கொள்கின்றது. இதனால் மாரடைப்பு மற்றும் ஸ்ட்ரோக் போன்ற பிரச்சனைகளிடமிருந்து நம்மை காத்துக் கொள்ள முடியும்.

மாதவிடாய் பிரச்சனைகளை நீக்குவது பெண்களே! கொடுமையான மாதவிடாய் பிரச்சனைகளில் தவிக்கின்றீர்களா? உங்களுக்கு ஒரு தீர்வு இதோ! சூடான இஞ்சி டீயை ஒரு துணியில் நனைத்து அடி வயிற்றில் போட்டால் அது தசைகளை இளைப்பாற செய்து ஆறுதல் தரும். அதுமட்டுமல்லாமல் ஒரு கப் இஞ்சி டீயில் தேன் கலந்து குடிப்பது மேலும் நன்மை தரும்.

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கின்றது அதிக அளவு ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் இருப்பதால் இஞ்சி நோய் எதிர்ப்பு சக்தியையும் அதிகரிக்கின்றது.

மன அழுத்தத்திலிருந்து நம்மை காக்கின்றது இஞ்சி டீக்கு அமைதிப்படுத்தும் தன்மை உண்டு. ஆகையால் மிகுந்த மன அழுத்தம் மற்றும் பதற்றம் ஆகியவற்றை குறைக்க உதவும். இதற்கு அதில் உள்ள அதிக அளவு குணமாக்கும் தன்மையும், வலுவான நறுமணமும் தான் காரணம் என்று எண்ணப்படுகின்றது.

Sunday, April 12, 2015

இந்துக்கள் மீது கை வைத்தால்!?

ஆந்திர மாநிலத்தில் திருப்பதி சேஷாலம் வனப்பகுதியில் செம்மரத்தை திருட்டுத்தனமாக வெட்டினார்கள் என தமிழகத்தை சேர்ந்த 20 கூலித் தொழிலாளர்களை ஆந்திர காவல்துறை சுட்டுக் கொன்றிருக்கிறது. ஆனால் அவர்கள் அப்போது மரம் வெட்டியதற்கான எந்தவொரு அறிகுறியுமில்லை. அரசால் முன்னரே கைப்பற்றப்பட்டு சிவப்பு சாயம் பூசப்பட்ட செம்மரக்கட்டைகளை என்கவுண்டர் செய்த இடத்தில் பரப்பி போலியாக காவல் துறை ஆதாரங்களை உருவாக்கி இருக்கின்றனர்.

முறையான எந்தவொரு விசாரணையுமின்றி, அந்த கூலித்தொழிலாளர்கள் ஆந்திர மாநில காவல் துறையால் என்கவுண்டர் செய்யப்பட்டிருப்பது மிக கடுமையாக கண்டிக்கத்தக்கது. அவர்கள் தவறு செய்திருந்தால் அவர்கள் மீது இந்திய குற்றவியல் சட்டத்தின் அடிப்படையில் வழக்கை பதிவு செய்து, நீதிமன்றத்தில் முறையாக விசாரித்து தண்டனை அளித்திருக்க வேண்டும். ஆனால் காவல் துறையே தண்டனை வழங்கும் பொறுப்பை கையில் எடுத்திருப்பது ஜனநாயகத்திற்கும் நீதித்துறைக்கும் ஆரோக்கியமான வழிமுறையாக இருக்காது.

திட்டமிட்ட என்கவுண்டர் : கடந்த நான்கு நாட்களில் மட்டும் 27 என்கவுண்டர்கள், 20 தமிழர்கள், 7 இஸ்லாமியர்கள்.  போலி என்கவுண்டர் நடத்திய காவல் என்ற காவித்துறையை பற்றி எந்த வேசி ஊடகங்கள் வாய் திறக்கவில்லையே ஏன் செத்தது முஸ்ஸிம் என்பதாலா?

இருவருக்கும் பொதுவான எதிரி யார்? .20 மாட்டை வெட்டியிருந்தால் இந்நேரம் காவி இந்துத்துவா கொழுந்துவிட்டு எரிந்திருக்கும். செத்தது சாதாரண (தமிழர்கள்) மனிதன்தானே.

"இந்துக்கள் மீது கைவைத்தால் நான் ஹிட்லர் ஆவேன்னு" கொஞ்ச நாளைக்கு முன்னாடி ஒரு நாய் குலைத்ததே எங்கே அந்த பார்பனிய HIV  ராஜா?.

தமிழனாகிய நமக்கு இதுவேதான் முடிவாகுமா ஒட்டுமொத்த தமிழனும் ஒன்றுகூடி நின்றால் ஒரு நாதாரி நாயும் நம்மல ஒன்னுமே பன்ன முடியாது.

இந்திய அரசு கொண்டு வரும் கருப்பு சட்டங்கள் எல்லாம் முஸ்லிம்களுக்கும், அநியாயத்தை கண்டு கொதித்தெழும் நியாயவான்களுக்கும்தான்.

இப்படியான சட்டங்கள் பார்ப்பனர் மீதோ அல்லது பாஷிச சங்கபரிவார் மீதோ இதுவரை பாய்ந்ததுண்டா?.

1992 ஆரம்ப காலங்களில் அப்போதைய காங்கிரஸ் அரசு கொண்டு வந்த தடா சட்டம். 2000 பாஜக தேசிய ஜனநாயக கூட்டணி கொண்டு வந்த பொடா சட்டம். 2009 பின் காங்கிரஸ் கூட்டணி கொண்டுவந்த UAPA கருப்பு சட்டம்.

காங்+ பாஜக = பார்பனிய குள்ளநரி கூட்டம்.

Sunday, March 29, 2015

உடல் உறுப்புகளை பாதுகாக்க டிப்ஸ்!?

உடல் உறுப்புகலில் என்ன என்ன நோய் அதை பாதுகாக்க சில டிப்ஸ்! உங்களுக்கு நோய் என்ன உறுப்புக்களின் அறிகுறிகளை வைத்து தெரிந்துகொள்ளலாம்.

கண்கள் உப்பியிருந்தால் என்ன வியாதி. சிறுநீரகங்கள் மோசமாக இருப்பதைக் குறிக்கிறது. சிறுநீரகங்கள் உடலில் இருக்கும் கழிவுப் பொருட்களை அகற்றும் வேலையைச் செய்பவை. அவை சரிவர வேலை செய்யவில்லை என்றால், உடலில் சேரும் அசுத்த நீர் வெளியேற முடியாமல் போகும். இவை கண்களைச் சுற்றித் தேங்கி விடுவதால் கண்களைச் சுற்றி வீக்கம் போலத் தோன்றும்.

டிப்ஸ் : உணவில் சேர்த்துக் கொள்ளப்படும் உப்பின் அளவைக் குறைத்துக் கொள்ளவேண்டும். மேலும் அதிகப்படியான நீர் அருந்துவது சிறுநீரகங்கள் சரியாக வேலை செய்ய உதவும்.

கண் இமைகளில் வலி.. என்ன வியாதி: அதிகப்படியான வேலை காரணமாக இந்த வலி வரலாம். மேலும் மக்னீசியம் உடலில் குறைவதால் உடல் சோர்வடைந்து கண் இமைகளில் வலி உண்டாகிறது.

டிப்ஸ்: போதுமான அளவு ஓய்வு எடுத்துக் கொள்ளவேண்டும். அதோடு உணவில் முட்டைக்கோஸ் மற்றும் கீரைகளை அதிக அளவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

கண்களில் தெரியும் அதிகப்படியான வெளிச்சம் என்ன வியாதி: அதிகமாக வேலை செய்து கொண்டே இருப்பது. இந்த ஸ்டிரெஸ்ஸினால் உங்கள் மூளை குழப்பமடைந்து கண்களுக்கு தவறான தகவல்களை அனுப்பிவிடுகிறது. அந்த நேரத்தில் நமக்கு சட்டென அதிகப்படியான வெளிச்சங்களும், புள்ளிகளும் பார்வைக்குத் தெரிகிறது.

டிப்ஸ்: எப்பொழுதும் நிமிர்ந்து நிற்க வேண்டும். அதிகமாக காபி குடிக்கும் பழக்கத்தையும் தவிர்க்க வேண்டும்.

கண்கள் உலர்ந்து போவது.. என்ன வியாதி: நாம் ஏ.சி. நிறைந்த இடங்களில் அதிக நேரத்தைச் செலவிடும் போதும், கண்கள் அதிக வேலையினால் களைப்படையும் போதும் நம் கண்கள் உலர்ந்து மிகுந்த பாதிப்புக்குள்ளாகிறது.

டிப்ஸ்: குறைந்தது எட்டு மணி நேர இரவுத் தூக்கம் மிகவும் அவசியம். தினமும் கண்களை மேலும்_கீழுமாகவும், பக்கவாட்டின் இருபுறமும் அசைத்தல் போன்ற எளிய உடற்பயிற்சிகளை ஒரு நாளில் இரண்டு முறை செய்யவேண்டும்.

தோலில் தடிப்புகள் ஏற்படுதல் என்ன வியாதி: இருதய நோய் இருக்கலாம். குறிப்பாக இது காதுகளுக்குப் பக்கத்திலிருக்கும் தோலில் ஏற்படுமானால் உங்களுக்கு இருதய கோளாறு உள்ளது என்று தெரிந்து கொள்ளலாம். ஆனால், இப்படி அந்த இடத்தில் ஏன் தோல் தடிக்கிறது என்று டாக்டர்களுக்கே இன்னும் சரிவர புரியவில்லை என்கிறார்கள்.

டிப்ஸ்: அதிகப்படியான மன அழுத்தம் ‘ஹார்ட்_அட்டாக்’ வருவதற்கான வாய்ப்பை உருவாக்கும். மனதை பாரமில்லாமல் லேசாக வைத்துக் கொள்ள முயற்சிப்பதும், பிரச்சினைகளை நல்ல முறையில் அணுகுவதும் இதைத் தவிர்க்கும்.

முகம் வீக்கமாக இருப்பது என்ன வியாதி: உடலில் தண்ணீர் இழப்பு அதிகமாக இருப்பது. இப்படி ஏற்படும்போது உடலுக்குத் தண்ணீர் அதிகம் தேவைப் படுகிறது. உடலுக்குப் போதுமான தண்ணீர் கிடைக்காமல் போனால், ரத்த செல்கள் விரிவடைந்து முகம் வீக்கமாகத் தெரியும்.

டிப்ஸ்: ஒரு நாளைக்கு எட்டு கிளாஸ் தண்ணீராவது அருந்துவது அவசியம். எப்போதும் தண்ணீர் பாட்டிலை உடன் வைத்துக் கொண்டால் தண்ணீர் அருந்த வேண்டும் என்கிற உணர்வு ஏற்பட்டு அருந்துவீர்கள்.

தோல் இளம் மஞ்சளாக மாறுவது என்ன வியாதி: கல்லீரல் நோய். கல்லீரல் பாதிப்படையும்போது உடலிலிருக்கும் பித்த நீர் போன்ற மஞ்சள் நிற திரவங்களை வெளியேற்ற முடிவதில்லை. இதனால் தோல் மஞ்சள் நிறத்திற்கு மாறுகிறது.

டிப்ஸ்: அதிகப்படியான ஆல்கஹாலின் அளவால் இப்படி கல்லீரல் பிரச்சினை ஏற்படுகிறது. குடிப்பழக்கம் இருந்தால், உடனடியாக நிறுத்தி விடுவதே நல்லது.

பாதம் கை கால்களில் சில நேரங்களில் சுறுசுறுவென உள்ளே ஏதோ ஓடுவது போலிருத்தல் என்ன வியாதி: சீரான ரத்த ஓட்டமின்மை. ரத்தக் குழாயில் அடைப்பு இருந்தால் உடலின் ரத்த ஓட்டம் சீராக இருக்காது. இந்த அறிகுறி உங்கள் ரத்தமானது பாதம் வரை சீராக ஓடச் செய்யும் முயற்சியே ஆகும்.

டிப்ஸ்: வைட்டமின் நிறைந்த உணவுகளும் கீரைகளும் சாப்பிட வேண்டும்.

பாதம் மட்டும் மரத்துப் போதல் என்ன வியாதி: நீரிழிவு நோயின் பாதிப்பு. டயபடீஸ், ரத்தத்திலிருக்கும் செல்களைப் பாதிப்பதோடு, நரம்புகள் செய்யும் வேலைகளையும் தடுத்து விடுகிறது. இதன் விளைவாக சில நேரங்களில் கால்களில் செருப்புக்கள் உராய்ந்து ஏற்படுத்தும் எரிச்சலையோ வலியையோகூட உணர்ந்து கொள்ள முடியாது.


டிப்ஸ்: பிளாக் டீ அல்லது கிரீன் டீ உங்கள் இரத்தத்திலிருக்கும் குளுக்கோஸின் அளவைக் குறைத்து நீரிழிவு நோயைக் கொஞ்சம் கட்டுப்படுத்தும். உடல் பருமனும்கூட டயபடீஸ் வருவதற்கு ஒரு முக்கிய காரணமாகும். அதனால் உடல் எடை அதிகமாகாமல் பார்த்துக் கொள்ள வேண்டியது அவசியம்.

பாதங்களில் உலர்ந்த வெடிப்புகள் என்ன வியாதி: தைராய்டு பிரச்சினையாக இருக்கலாம். இந்த தைராய்டு சுரப்பிதான் நம் தோலுக்குத் தேவையான ஹார்மோன்களை ஒழுங்கு செய்கிறது. இந்த தைராய்டு சுரப்பி சரியாக வேலை செய்யாதபோது, நம் பாதங்களின் தோல் உலர்ந்துபோகும். பாதங்களை சரிவரபாராமரிக்காமல் இருந்தால் அதிக அளவில் பாதிப்படைந்துவிடும்.

டிப்ஸ்: தைராய்டு பிரச்சினையின் வேறு சில அறிகுறிகள், அதிக சோர்வும் உடல்எடை அதிகமாதலும் இதில் எந்த அறிகுறிகள் இருந்தாலும் மருத்துவரைச் சந்திப்பது அவசியம்.

சிவந்த உள்ளங்கை என்ன வியாதி: கல்லீரல் பிரச்சினையாக இருக்கலாம். நோய்வாய்ப்பட்ட கல்லீரலால், நம் இரத்தத்திலுள்ள ஹார்மோன்களைக் கட்டுப்படுத்த முடியாமல் போகும். அதனால் உங்கள் ரத்தத்தின் நிறம் அதிக சிகப்பாகிவிடும். கல்லீரல் சரியாக வேலை செய்யவில்லை என்பதை, அதிக சிவப்பான உள்ளங்கைகள் தான் சட்டென காட்டிக் கொடுக்கும். காரணம் உடலின் மற்ற பாகங்களைவிட உள்ளங்கையின் தோல் மிகவும் மிருதுவாக இருப்பதுதான்.

டிப்ஸ்: கீழாநெல்லியை வாரத்தில் ஒருதரம் சாப்பிடுவது கல்லீரலைச் சரிப்படுத்தும். உடம்பின் விஷத்தன்மையை மாதம் ஒரு முறையாவது போக்க, ஒரு நாள் பழம் மட்டும் சாப்பிடுங்கள்.

வெளுத்த நகங்கள் என்ன வியாதி: இரத்த சோகை இருக்கிறது. இரத்தத்திலுள்ள சிகப்பணுக்கள் அளவில் குறையும்போது சின்னச் சின்ன வேலையைச் செய்வதற்கும் உடல் பலமின்றிப் போகும். ரத்தத்தின் சிவப்பணுக்கள் குறைவதால், இயல்பாக நகம் இருக்க வேண்டிய பிங்க் நிறம் போய், வெளுத்து விடுகின்றன.

டிப்ஸ்: இரும்புச்சத்து இரத்தத்திலுள்ள சிகப்பணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்கச் செய்யும். ஈரல், கீரைவகைகள், மற்றும் இறைச்சியை உணவுடன் சேர்த்துக் கொள்ளவேண்டும். அல்லது டாக்டரின் ஆலோசனையின்படி குறிப்பிட்ட நாட்களுக்கு இரும்புச்சத்து மாத்திரைகளோடு பி_12 மாத்திரைகளையும் எடுத்துக் கொள்வது நல்லது.



விரல் முட்டிகளில் வலி என்ன வியாதி: ஆர்த்தரடீஸ் என்னும் மூட்டுவலி இருக்கிறது. இதனால் விரல் முட்டிகளில் வீக்கமும் வலியும் ஏற்படும். இந்த வலி அதிகமாக விரல் முட்டிகளில்தான் காணப்படும். அவை வடிவத்தில் சிறியதாக இருப்பதால், இந்த வலி உடனே வர வாய்ப்புண்டு. வயதானவர்களுக்கு மட்டுமே இந்த மூட்டுவலி வருவதில்லை. எந்த வயதுக்காரர்களுக்கும் வரலாம்.

டிப்ஸ்: உடலுக்குத் தேவையான கால்சியம் மற்றும் வைட்டமின் ஙி சரியான அளவில் எடுத்துக் கொண்டால் மூட்டு வலி வருவதைக் குறைக்கலாம். ஒழுங்கான உடற்பயிற்சிகள் மற்றும் உடல்பருமனைக் குறைத்தல் இரண்டும் மூட்டு வலி வராமல் தடுக்கும்.

நகங்களில் குழி விழுதல் என்ன வியாதி: சோரியாஸிஸ் இருக்கிறது. இது ஒரு மோசமான தோல் வியாதி. இதன் மூலம் தோலும் நகங்களும் மிகவும் மென்மையாகி விடும். இந்த வியாதி வந்தால் மென்மையான நகங்களில் குழிகள் வரக்கூடும்.

டிப்ஸ்: உடனடியாக சரும வியாதி நிபுணரைக் கலந்தாலோசிக்கவும். ஸ்டிரெஸ்ஸைக் குறைத்துக் கொண்டாலே வியாதி அதிகமாவதைத் தடுக்கலாம்.

வாய்ஈறுகளில் இரத்தம் வடிதல் என்ன வியாதி: பல் ஈறு சம்பந்தப்பட்ட நோய் இருக்கிறது. ஈறுகளிலும் அவற்றின் அடியிலிருக்கும் எலும்புகளிலும் தொற்று நோய்க் கிருமிகளின் தாக்குதல் இருந்தால், பற்கள் உறுதி இழந்து விழுந்துவிடும். பல் துலக்கும்போது ஈறுகளில் ரத்தம் வருவது இந்த நோயின் முதல் அறிகுறி.

டிப்ஸ்: தினமும் பற்களைச் சுத்தமாக துலக்குவதும், பற்காரைகள் வராமல் பாதுகாப்பதும் அவசியம். ஆன்ட்டி பாக்டீரியல் கொண்ட மவுத் வாஷ் கொண்டு வாய் கொப்பளிப்பது நல்லது.

சாப்பிடும்போது வாய் முழுக்க வலி ஏற்படுதல் என்ன வியாதி: வாய்ப்புண் இருக்கிறது. அதிகமாக ஸ்டிரெஸ் செய்து கொள்வதாலும் வாய்ப்புண் வரலாம். உடலில் ஃபோலிக் ஆசிடின் குறைவு மற்றும், இரும்புச்சத்து அல்லது வைட்டமின் பி_12ன் குறைவினாலும் இப்படி ஏற்படுகிறது.

டிப்ஸ்: ‘மல்டி_விட்டமின்’ மாத்திரைகளைத் தினமும் எடுத்துக் கொள்ளவேண்டும். மேலும் தியானம் மற்றும் யோகா செய்வதால் ஸ்டிரெஸ்ஸைக் குறைக்கலாம்.

ஹைட்ரஜன் பெராக்ஸைடு கொண்டு வாய் கொப்பளித்து வருவதால் இன்பெக்ஷன் குறைந்து வாய்ப்புண் ஆறும். வாய் ஈரப்பசையின்றி உலர்ந்து போவது. என்ன வியாதி: உடலின் போதுமான நீர்ச்சத்து குறைந்து போயிருக்கிறது. உடலில் அதிகப்படியான நீர் வெளியேறுவதால் இந்த டீஹைடிரேஷன் ஏற்படுகிறது. மேலும் அதிகப்படியாக வியர்ப்பது மற்றும் நீரிழிவு நோயும்கூட வாய் உலர்ந்து போவதற்கு காரணமாகும்.

டிப்ஸ்: நிறைய திரவ ஆகாரம் எடுத்துக் கொள்ளவேண்டும். தினமும் குறைந்தது ஒன்றரைலிட்டர் தண்ணீர் அருந்துவது அவசியம். அதன்கூடவே பழங்களையோ பழச்சாறோ அருந்துதலும் நல்ல பலன் தரும்.

Friday, March 13, 2015

காவி தீவிரவாதி என்பதால் கள்ள மவுனம்!?


புதிய தலைமுறை அலுவலகம் மீது வெடிகுண்டு தாக்குதல். அடையலாம் தெரியாத நபர்கள் என cctv வீடியோ ஆதாரங்களுடன் புதிய தலைமுறை செய்தி வெளியீடு.

உலகத்துல எந்த மூலைல குண்டு வெடிச்சாலும் உடனுக்குடன் கண்டுபுடிச்சி தீவிரவாதியின் பெயர், இயக்கத்தின் பெயர், பயிற்சி பெற்ற நாடு எல்லாம் துல்லியமா செய்தி போடுவிங்களே.

இதே சம்பவம் ஒரு முசுலீம் செய்திருந்தால் அகில உலக பயங்கரவாதியாக அல்கொய்தா இந்தியன் முஜாஹிதீன் ஐ.எஸ்.ஐ.எஸ்.லஷ்கர் இ தொய்பா என சித்தரிக்கப்பட்டு காட்சி ஊடகங்களில் ப்ளாஷ் நியுஸாகவும் அச்சு ஊடகங்களில் தலைப்பு செய்தியாகவும் ஒரு வாரத்திற்கு கவர்ஸ்டோரி போட்டிருப்பர். அவனது குடும்பம் நண்பர்கள் உறவினர்கள் என அத்தனை பேரும் ஊடக பயங்கரவாதிகளால் மானபங்க படுத்தப்பட்டிருப்பர் காவி தீவிரவாதி என்பதால் கள்ளமவுனம் காக்கிறது ஊடகங்கள் வாழ்க பத்திரிகை சுதந்திரம். உங்கள் அலுவலகதில்லேயே வெடிகுண்டு தாக்குதல் நடத்தியவர்களுக்கு பெயர் கிடையாதா ? இயக்கம் கிடையாதா ? பயிற்சி பெற்ற இடம் கிடையாதா ?.

அதிகாலை குண்டு வைத்துவிட்டு உடனே மதுரை சென்று கோர்ட்டில் குற்றவாளி சரண்டர் ஆகிறது சாத்தியமா? எல்லாமே ஒரு செட்அப் மாதிரி இருக்கிறது அல்லவா?.



அதுமட்டும் பத்தாது இன்னும் இவர்களுக்கு பின்னிருந்து தூண்டியவர்கள் யார்? வெடிமருந்து எங்கிருந்து கிடைத்தது? இதற்கு முன் எங்கெல்லாம் குண்டு வைத்தார்கள்? என்பதையும் ஆராய வேண்டும்.

மோடி அரசு மத்தியில் வந்ததையொட்டி தங்கு தடையின்றி பா.ஜ.க., ஆர்.எஸ்.எஸ். மற்றும் மதவாத அமைப்புகள் வன்முறைகளில் தீவிரமாக இறங்கிவிட்டன. இது ஒரு தொலைக்காட்சிமீது நடத்தப்பட்ட அச்சுறுத்தல் வன்முறை என்று எடுத்துக்கொள்ள முடியாது கருத்துச் சுதந்திரத்தின்மீது தொடுக்கப்பட்ட வன்முறை போர்!.

அராஜகத்தில் இறங்குவதற்கு காரணமே பா.ஜ.க தான். வன்முறையில் ஈடுபட்டு கைது செய்யப்பட்ட இந்து அமைப்பினரை புழல் சிறைக்கு சென்று சந்தித்தார் தமிழக பா.ஜ.க தலைவர். ஒன்று திரண்டு ஓங்கிய குரலால், ஒத்தக் கருத்துள்ள அனைவரும் ஓரணியில் திரண்டு ஒலிக்க முன்வர வேண்டும் - முறியடிக்க வேண்டும்.

இது போல சில்லறை வேலைகளை மத பற்று வெறி கொண்டவர்கள் செய்ய மாட்டார்கள் மாறாக இரு மதத்தினரின் உணர்வுகளை தூண்டும் முயற்சி அவ்வளவு தான். சண்டைய மூட்ட பார்க்கும் மூதேவிகள் இடம் கொடுக்கக் கூடாது.

நியூஸ்7 தொ.கா விவாதத்தில் நவீன இந்தியாவில் நடைபெற்ற கலவரங்கள் குறித்து ஆய்வு செய்து, அவை தற்செயலானவை அல்ல, திடீரென வெடிப்பவையுமல்ல. நன்கு திட்டமிடப்பட்டு முஸ்லிம்களைக் குறிவைத்து ஃபாசிச சக்திகளால் வழிநடத்தப்படுபவை” என்ற பால் ஆர் ப்ராஸ் சின் ஆய்வுத் தகவலை ஆதாராமாகக் குறிப்பிட்டோம்,

யாருமே அறிந்திராத ஆவணத்தை நாம் குறிப்பிடுவதாகக் குற்றம் சாட்டினார் பாஜக சார்பில் பேசிய நண்பர் வழ.ராமமூர்த்தி அவர்கள்,


இதோ அந்த ஆவணம் குறித்த பதிவு,:  Forms of Collective Violence: Riots, Pogroms, and Genocide in Modern india.
# This collection of essays focus on the various forms of collective violence that have occurred in India during the past six decades, which include riots, pogroms, and genocide. It is argued that these various forms of violence must be understood not as spontaneous outbreaks of passion, but as productions by organized groups. Moreover, it is also evident that government and its agents do not always act to control violence, but often engage in or permit gratuitous acts of violence against particular groups under the cover of the imperative of restoring order, peace, and tranquility. This has certainly been the case in numerous incidents of collective violence in India where curfew restrictions have been used for just such purposes. In this context, secularism constitutes a countervailing practice, and a set of values that are essential to maintain balance in a plural society where the organization of intergroup violence is endemic, persistent, and deadly.


Saturday, March 7, 2015

லிங்கம் பயன்படுத்தக்கூடாது சட்டம் !?

மாட்டினை கடவுளாக வணங்குவதில் மனிதனின் பகுத்தறிவுச் சிந்தனை மழுங்கிப் போவதை தான் காண முடிகிறது. மாட்டினுடைய கன்றினை அதன் மடியில் முட்ட வைக்கிறோம், தமது கன்று பால் கேட்கிறதே என்கிற தாய் பாசத்தின் மிகுதியால் மாடு பாலை சுரக்கிறது. உடனே, கன்றினை இடமாற்றி விட்டு கடகடவென அந்த பாலை நாம் கறந்து குடிக்கிறோம் என்றால்..இதற்கு மிஞ்சிய ஒரு மோசடி, ஒரு நயவஞ்சகம், ஒரு பித்தலாட்டம் வேறு இருக்க முடியுமா??. இத்தனையும் செய்து விட்டு, பசு பால் தரும் என்று பள்ளிகூடத்தில் பாடம் நடத்துகிறோம். பசு என்ன உனக்கா பால் தரும்?.

பசு வந்து நம்மிடம் அப்படி சொன்னதா? அது தமது குட்டிக்காக வைத்திருக்கும் பாலை, குட்டிக்காகவே சுரந்த பாலை நாம் களவாடி விட்டு, பசு பால் தரும் என்று சொல்கிறோம், ஒரு படி மேலே சென்று அதை தாய் என்கிறோம், கடவுள் என்கிறோம்.. பசுவுக்கு மட்டும் பேசுகிற ஆற்றல் இருந்தால் இந்த பாராட்டை அது ஏற்றுக் கொள்ளுமா  அல்லது உலகில் உள்ள கெட்ட கெட்ட வார்த்தைகள் அனைத்தையும் ஒன்று திரட்டி நம்மை காறி உமிழுமா?.

பசு பேசாது என்கிற தைரியத்தில் தான் இவர்கள் அதை கடவுள் என்கிறார்கள் !!

வண்டி மாடுகளைத் தடை செய்ய வேண்டும். காளை சிவனுக்குப் பிடித்தது. காளை வதை கூடாது. சேவல் கறியை தடை செய்ய வேண்டும். சேவர் கொடியோன் முருகனின் அன்பிற்குறியது. சேவல் வதை கூடாது. மீன் சாப்பிடுவதையும் தடை செய்ய வேண்டும். அது திருமால் அவதாரங்களில் ஒன்றான மச்ச அவதாரம். ஆமை உண்பதையும் தடை செய்ய வேண்டும். அது கூர்ம அவதாரம். பன்றி உண்பவர்களை தடை செய்யுங்கள். அது வராக அவதாரம். பாம்புகளைக் கொல்லாதீர்கள். அது பரம சிவனின் அணி கலன். சுன்டெலி உண்பவர்களை தடை செய்யுங்கள். பிள்ளையார் வாகனம். நாய்கள் ஜாக்கிரதை!. அது பைரவக் கடவுள். தாமரையைச் சூடாதீர். இலக்குமியின் இருக்கை.

சாப்பிட தகுதியானவற்றை சாப்பிடலாம், பால் கறக்க தகுதியானவற்றில் பால் கறக்கலாம், தோல் தேவையென்றால் தோலை எடுக்கலாம், உழுவதற்கு தேவையென்றால் அதற்கு பயன்படுத்தலாம், அவசியமற்று துன்புறுத்துதல் தான் பாவமே தவிர, நமக்கு தேவையான்வற்றை அதிலிருந்து பெற்றுக் கொள்ள எந்த தடையுமில்லை.

அதே சமயம் இதிலெல்லாம் விலங்குகளுக்கு எந்த பங்காவது இருக்கிறதா? அதுவாக விரும்பி, வலிய வந்து நமக்கு தேவையானவற்றை தந்தால் தான் அதற்கு இதில் பங்கு இருக்குமே தவிர, அதனுடைய சம்மதமின்றி, அதன் மேல் மனிதன் ஆதிக்கம் செலுத்தி விட்டு, இறுதியில் மாடு தந்தது, அதனால் அது தெய்வம், ஆடு தந்தது, அதனால் அது எங்கள் தாய் என்றெல்லாம் சொல்வது மடமையின் உச்சமல்லாமல் வேறென்ன.

எப்பா "கோ" பக்தர்களே, மாட்டுக்கறி (பீப்) மிக அதிகமாக சாப்பிடும் அமேரிக்கா, ஐரோப்பா, ஆஸ்திரேலியா, அரேபியா நாடுகளுக்கு பிழைக்க போகாதிங்க, அவர்கள் நடத்தும் கம்பனிகளில் வேலைசெயாதிங்க, அவர்கள் அளிக்கும் வேலைகளை எடுத்து செய்யாதிங்க, அவுங்க கொடுக்குற அந்நிய செலாவணி (டாலர்) வேண்டாம்முன்னு சொல்லுங்க... அந்நிய முதலீடுக்கு மட்டும் சூ... வாய.. மூடிகின்னு அவுங்ககிட்ட கைநீட்டி பிச்ச எடுக்கரிங்களே வெக்கம்மாயில்ல.

பெண்களையும் சூத்திரரையும் கொல்லுவது மிகவும் குறைந்த பாவமாகும்."( அ.11. சு.66.மனு). "ஒரு பிராமணன் தவளையைக் கொன்றால் செய்ய வேண்டிய பிராயச்சித்தம் ஏதோ, அதைத்தான் சூத்திரனைக் கொன்றாலும் செய்ய வேண்டும்." (அ.11. சு.131.மனு) ஓ அதனாலதான் குஜராத்ல முஸ்லீம் கர்ப்பிணி பெண்ணை கணவன் முன்னாடி கற்பழிச்சு அந்த பெண்ணோட வயித்த கிழிச்சு குழந்தையோட இரத்தத்த எடுத்து பொட்டு வச்சிக்கிட்டு போனீங்களா சூப்பர் வாழ்க மனுதர்மம் வளர்க நாய் மதம் எல்லோரும் நாய் மதத்துக்கு திரும்பி வாங்க.

சகோ,  மன்னிக்கவும் காரணம் இது 18 +  மாடு என்பது கடவுள் அதனால் அதன் கறியை பயன்படுத்தக்கூடாது. என்ற சட்டத்தை ஆதரிப்பவர்களே லிங்கம் கூட கடவுள்தான் அதனால் இனி யாரும் அதை பயன்படுத்தக்கூடாதுனு சட்டம் வந்தா ஆதரிப்பீர்களா?. (வரும் காலங்களில் இந்துத்துவா தீவிரவாதிகளால் இனி இதுவும் நடக்கலாம்).


Sunday, March 1, 2015

அலைபேசி அருமையா அவலமா?

மோட்டாரோலாவின் செங்கல் போன்ற மொபைல் போனிலிருந்து இன்றைய ஆப்பிள் ஐ போன் 6 , பிளாக் பெர்ரி (Blackberry) போன் வரை வளர்ச்சியைக் கொண்ட மொபைல் போனின் வயது சுமார் 31 ஆகிறது. 

1983ல் டாக்டர் மார்டின் கூப்பர் 2500 பவுண்ட் விலையில் முதன் முதல் மோட்டாரோலா டைனா ஏ. டி .சி 800 எக்ஸ் என்னும் மொபைல் போனை வர்த்தக ரீதியாகக் கொண்டு வந்தார். அப்போதெல்லாம் பெரும் செல்வந்தர்களின் சொகுசு சாதனமாக செல்போன் இருந்து வந்தது. இந்நிலை நீண்ட நாட்களாக இருந்து வந்த போதிலும் அண்மைக் காலமாக அன்றாட வாழ்க்கையின் அத்தியாவசிய சாதனமாக அது மாறிவிட்டது. மொபைல் போன் முதன் முதலில் வந்து ஓராண்டு கழிந்த பின்னர் உலகில் சுமார் 12ஆயிரம் பேரே அதன் உபயோகிப்பாளர்களாக இருந்தனர். ஆனால் இன்று அனைத்து நாடுகளிலும் கோடிக்கணக்கானோர் பயன்படுத்தி வருகின்றனர்.

இந்தியாவில் மட்டும் மொபைல் போனை உபயோகிப்பவர்களின் எண்ணிக்கை 670 மில்லியன் என அரசு செய்திக் குறிப்பு தெரிவிக்கிறது. பேசுவதற்கு மட்டும் வந்த இந்த மொபைல் போன் இன்று டெக்ஸ்ட் மெஸேஜ்களை (எஸ்எம்எஸ்) அனுப்புவதற்கும்பெரும்பாலும் பயன்படுத்தப்படுகிறது. இதனைத் தொடர்ந்து பெரிய அளவில் டேட்டா (Data) பரிமாற்றத்திற்காக ஏற்படுத்தப்பட்டதே இன்று 3ஜி மற்றும் இனி வர இருக்கும் 4 ஜி மொபைல் சேவைகள் ஆகும். இந்த வேக மாற்றங்கள் இனிவரும் காலங்களில் மொபைல் போனில் எத்தகைய மாற்றங்கள் ஏற்படும் என்பது கற்பனை கூடசெய்து பண்ணிப் பார்க்க முடியாத நிலையிலுள்ளது.
 
பொதுவாக  மொபைல் மூலமாகவும் தொல்லை கொடுப்பது தடை செய்யப்பட்டதே! நாம் தொடர்பு கொள்ளக்கூடிய சகோதரர்கள் நோயாளியாக, பிஸியாக அல்லது ஏதாவது கூட்டங்களில் இருக்கலாம் எனவே அவர்களிடமிருந்து நமது அழைப்புக்கு பதில் வராத சந்தர்ப்பங்களில் அவர்களை மீண்டும் மீண்டும் அழைத்து தொல்லை கொடுக்காமல் இருக்க வேண்டும். அவ்வாறே தூங்கக்கூடிய நேரங்கள்,  வணக்கங்களில் ஈடுபடக் கூடிய சந்தர்ப்பங்களில் பிறரை அழைத்து தொல்லை கொடுப்பது  அனுமதிக்காத விஷயமாகும்.
 
தொலைபேசி மூலமாக ஒருவருடன் தொடர்பு கொள்ளக் கூடியவர் ஆரம்பத்தில் தன்னை அறிமுகப்படுத்திக் கொள்வதே ஒழுங்காகும். ) எனவே ஒருவரோடு தொடர்பு கொள்ளும் போது நாம் யார் என்பதை அடையாளப்படுத்துவது அவசியம் என்பது தெளிவாகின்றது. குறிப்பாக, தொலைபேசி மூலமாக பேசும்போது நாம் யார் என்பதை அடையாளப்படுத்தாவிட்டால் தொடர்பு கொண்டவர் கோபத்தில் அழைப்பைத் துண்டிக்க வாய்ப்பிருக்கிறது. சிலர் தொடர்பு கொண்டுவிட்டு மறுதரப்பில் உள்ளவர்களிடம் ‘நீங்கள் யார் ?’ என வினவுவது அநாகரீகமான செயலாகும். எனவே தொடர்பு கொண்டவரே தன்னை அறிமுகப்படுத்துவதுதான் தொலைபேசி ஒழுங்கும்.  மேலும் தொடர்பு கொள்ளக் கூடிய ஒருவர் மறுதரப்பில் இருந்து பதில் எதுவும் கிடைக்காத போது உடனடியாக தனது மொபைலை ஆஃப் செய்துவிடுவதும் அவரை ஒரு வகையில் சங்கடத்தில் ஆழ்த்தும். எனவே இதுவும் தவிர்க்கப்பட வேண்டியதே!
 
கூட்டங்களில் (மீட்டிங்ஸ்) அமர்ந்திருக்கும் ஒருவர் பிறரோடு தொடர்பு கொள்வதும் தனக்கு வரும் அழைப்புகளுக்கு பதில் தருவதும் நாகரீகமற்ற செயலாகும். அவ்வாறு நடந்து கொள்வது கூட்டத்தில் அமர்ந்திருப்போருக்கும் அதை நடத்துபவருக்கும் தொல்லை தரும் என்பதில் எவ்வித சந்தேகமுமில்லை. எனவே மொபைலை உபயோகிப்பவர்கள்இச்செயலை கண்டிப்பாக தவிர்ந்து கொள்ள வேண்டும். மொபைலை ‘ ஸைலென்ட் மோடில் வைத்துக் கொள்ளலாம். அல்லது ஆஃப் செய்துவிடலாம். இன்று பெரும்பாலான கூட்டங்களின் ஆரம்பத்தில் இவ்விஷயம் நினைவூட்டப்படுவது குறிப்பிடத்தக்கது.
 
வாகன ஓட்டுனர்கள் வாகனங்களை ஓட்டும் போது மொபைல் போன்களை பயன்படுத்துவது அதிக அளவில் விபத்துக்கள் ஏற்படுவதற்கு காரணமாக அமைவதாக ஆய்வுகள் கூறுகின்றன. விபத்துக்களில் 28 சதவீதமானவை வாகனங்களை ஓட்டும் போது மொபைல் போன்களில் பேசுவதாலும், எஸ்எம்எஸ் அனுப்புவதாலும் ஏற்படுவதாக ‘தி வாஷிங்டன் போஸ்ட் ’ இணையதளம் கூறுகிறது. இதனாலேயே பல நாடுகளில் இது ஒரு தண்டனைக்குரிய குற்றமாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.   உயிர்கள் பெறுமதிப்புமிக்கவையாக உள்ளன. பிறர் உயிர்களுக்கு ஆபத்தை உண்டு பண்ணுவதும் , தன்னைத்தானே அழித்துக் கொள்வதும் , வாகனங்களை ஓட்டும் போது மொபைல் போனை பயன்படுத்துவதைத் தவிர்ப்பது கடமை என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும்.

மொபைல் போனின் பயன்பாடுகளில் டெக்ஸ்ட் மெஸேஜ் அனுப்புவது மிக முக்கியமான ஒன்றாக உள்ளது. ஆனால் இதில்  ஆபாசமான , விரசமான செய்திகளையும் உறுதிப்படுத்தப்படாத தகவல்களையும் அனுப்புவதும் அடுத்தவர்களின் மனங்களை புண்படுத்தக்கூடிய செய்திகளை பரப்புவதும் . ‘தான் கேட்கின்ற அனைத்தையும் (உறுதிப் படுத்தாமல்) உடனே அறிவிப்பது ஒருவன் பொய்யன் என்பதற்குப் போதுமான சான்றாகும்’  மொபைல் போன்களின் மூலமாக ஆபாசத்தையும் அவதூறுகளையும் வதந்திகளையும் பரப்புவோர்   கடுமையான தண்டனைக்கு உட்படுத்தப் படுவார்கள்  

 மொபைல் போன் என்பது தகவல் தொடர்பு வசதிக்காக வந்த ஒரு சாதனமாக இருந்த போதிலும் அதையே வேடிக்கையாகப் பயன்படுத்தும் போக்கு இன்று பலரிடம் வளர்ந்து வருகிறது.  மொபைல் போன்களில் உள்ள வீடியோ, போட்டோ கேமராக்களை வைத்து அந்நியப் பெண்களை படம் எடுப்பதும் அவற்றை அசிங்கமான முறையில் பயன்படுத்துவதும் தம்முடன் தொடர்பு கொள்வோரின் உரையாடல்களை திருட்டுத்தனமாக பதிவு செய்வதும்  மோசமான செயல்களாகும். இதனால் பல விபரீதமான விளைவுகளும் ஏற்பட்டுக் கொண்டிருக்கின்றன. போன்கள் பழுதடையும்போது அவற்றைத் சரி செய்வதற்காக டெக்னீஷியனிடம் ஒப்படைக்கும் போது மிக கவனமாக இருக்க வேண்டும். மொபைல் போனிலுள்ள மெமரி கார்டை எடுக்காமல் கொடுத்ததனால் சில பெண்கள் தங்களது கற்புகளை இழந்த நிகழ்வுகளும் உள்ளன.
 
பிள்ளைகள் மொபைல் போன் பயன்படுத்தும் போது அவர்களை கவனிப்பது பெற்றோரின் பொறுப்பு பிள்ளைகள் பெற்றோரிடம் அமாநிதமாக ஒப்படைக்கப்பட்ட செல்வங்கள். எனவே அவர்களை  ஒழுக்கத்துடனும் வளர்த்தெடுப்பதுபெற்றோரின் கடமையாகும்.  ஆனால் இன்றைய இளைய தலைமுறையினர் அதை வேடிக்கைக்காகவும் பொழுதுபோக்கிற்காகவும் பயன்படுத்த ஆரம்பித்து விட்டனர். இதனால் பல மோசமான விளைவுகள் ஏற்படுகின்றன. இளைஞர்களிடம் ஒழுக்கச் சீர்கேடுகள் வேகமாகப் பரவுகின்றன. அவர்களது கல்வியிலும் பாதிப்புகள் ஏற்படுகின்றன. இதனால்தான் உத்தரப்பிரதேசம் போன்ற சில இடங்களில் திருமணமாகாத பெண்கள் மொபல் போனில் பேசத் தடை விதிக்கப்பட்டுள்ளது. எனவே , பெற்றோர் தேவையில்லாமல் தமது பிள்ளைகளுக்கு மொபைல் போன் வாங்கிக் கொடுப்பதை தவிர்க்க வேண்டும். அவர்கள் அதனை வைத்துக் கொள்ள வேண்டுமென்றநிலை ஏற்பட்டால் அவர்களை சரியான முறையில் கவனித்து வழிகாட்ட வேண்டும்.

“உண்ணுங்கள் பருகுங்கள் , வீண் விரயம் செய்யாதீர்கள்” மொபைல் போன் உபயோகிப்பாளர்கள் பணம் , நேரம் போன்றவற்றை வீண் விரயம் செய்வது பரவலாக உணரப்படுகிறது , எனவே , வீண் அவ்வாறே மொபைல் போனை நீண்ட நேரம் பயன்படுத்துவதால் உடல் நலத்திற்குரிய பாதிப்புகளை ஏற்படுத்துவதாக எச்சரிக்கப்பட்டுள்ளது. ஆக , 
மொபைல் போன் அருட்கொடைகளில் ஒன்றாக கருதப்படும் மொபைல் போனை  வரையறைகளுக்குள் பயன்படுத்தி நன்மைகளை அடைய முயற்சி செய்வோம்.

இவ்ளோ தூரம் வந்திடீங்கே! மனசுல பட்டத சொல்லிட்டு போங்க, நன்றி.!